லண்டன்: ‘கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை மீண்டும் தொடங்கப்படும்’ என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், சில தினங்களுக்கு முன் பரிசோதனை நிறுத்தப்பட்டது.