ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் போதுமானதாக இல்லாததால் தெருக்கள் முழுவதும் கழிவுநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் கோரிக்கை ஏற்று 7 மாதங்களுக்கு முன்பு புதிய கால்வாய் கட்டும் பணி நடந்தது. ஆனால் அந்த கால்வாய் முறையாக கட்டப்படாததால் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கழிவுநீரில் இருந்து நோய் பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.