தலையில் கல்லை போட்டு மனைவி கொடூர கொலை: கணவன் கைது

பூந்தமல்லி: சென்னை ராமாபுரம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் முருகன் (58), குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி கங்கா (55). தினசரி முருகன் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இதனால், கணவனை கண்டிக்குமாறு கங்கா தனது மகன் பாலசுப்ரமணியனிடம் கூறியுள்ளார்.  அதன்பேரில், கடந்த வாரம் பாலசுப்பிரமணியம் தனது தந்தையை கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த முருகன், ‘‘மகனை வைத்து என்னை  கண்டிக்கிறாயா,’’ என்று கேட்டு மனைவியை தாக்கி, தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த கங்கா, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ராயலா நகர் போலீசார், முருகன் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: