முழு கொள்ளளவை எட்டும் சோத்துப்பாறை அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாகும். கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை நிரம்பி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 33 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணை முழு கொள்ளளவை நாளை காலைக்குள் எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்ட உள்ளதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: