ஊத்துக்கோட்டை: பஸ் ஸ்டாப்பை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளதால் அதில் இருந்து பாம்புகள் வருகிறது. இதனால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் மதுரவாசல் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மதுரவாசல் பஸ் ஸ்டாப்பில் இருந்து பெரியபாளையம், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளுக்கு பஸ்கள் செல்கிறது. மதுரவாசல் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பயன்படுத்துகின்றனர்.