போடி: போடி பகுதியில் கொட்டக்குடி ஆறு, முல்லை பெரியார் பாசனத்தின் கீழ் வருடம் ஒரு முறை ஒருபோகம் நெல் சாகுபடி இரு பிரிவுகளாக நடந்து வருகிறது.அதன்படி போடியை சுற்றியுள்ள குரங்கணி, முந்தல், மீனாட்சிபுரம், பொட்டல்களம், காமராஜபுரம், விசுவாசபுரம் அணைக்கரைப்பட்டி, உப்புக்கோட்டை, கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட குதிகளில் சுமார் 1000 ஏக்கர் ஒரு போகத்திற்கான நெல் சாகுபடிக்கு விதைகளை நாற்றங்கால் பாவும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. முதற்கட்டமாக விவசாயிகள் மழையும், கொட்டக்குடி ஆறு , முல்லை பெரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு நாற்றாங்கால் பாவம் பணிக்கு தொழிலாளர், இயந்திரம் மூலம் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.போடி உதவி வேளா ண்மை துறை சார்பில் விதை நெல், தேவையான உபகரணங்கள் வழங்கி வழிகாட்டி வருகின்றனர்.