கமுதி: கமுதி அருகே பேரையூரை சேர்ந்த வாலிபருக்கு ஓவிய மராத்தான் போட்டியில் உலக சாதனை விருது கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர் திண்டுக்கலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் 25 பேருக்கு இலவச ஓவிய பயிற்சி அளித்து வந்தார். இந்த நிலையில், சீர்காழியில் நடந்த ஓவிய மராத்தான் போட்டியில் பங்கேற்றார். ‘‘ஜாக்கி கிரியோடன்ஸ் சுவடுகள்’’ என்ற அமைப்பின் சார்பாக நடைபெற்ற போட்டிக்கு அஞ்சல் வழி மூலமாக ஒரே வாரத்தில் 1200 ஓவியங்களை அனுப்பி வைத்தார்.