மேலூர்: மேலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் குழந்தை பெற்ற பெண் உயிரிழந்தார். இதனை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே பூதமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ஒய்யம்மாள் (25). இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்காக மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை 10 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயங்கினார். எனவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்த செவிலியர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் 1 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை.