சென்னை: சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அரசிதழில் வெளியிட்டது. பிராந்திய மொழிகளில் அதன் மொழி பெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் தியாகராஜன் மற்றும் வக்கீல் ராம்குமார் ஆகியோர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.