ஆவடி,: திருமுல்லைவாயல் லலிதாம்பாள் நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் சபீர்பாட்ஷா (38). நிருபர். நேற்று முன்தினம் இரவு தலைமை செயலகத்தில் இருந்து வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர் அம்பத்தூர், சி.டி.எச் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே பைக்கில் வந்தபோது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அவர் சாலை ஓரமாக பைக்கை நிறுத்தி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் சபீர்பாட்ஷாவின் கையில் இருந்து செல்போனை பறித்து மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர்.