நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்பவனிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுத்து, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று (7ம் தேதி) நடைபெறும். நாளை(8ம் தேதி) கொடியிறக்கபட்டு விழா நிறைவு பெறும். விழா நாட்களில் வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா தேர் பவனிக்கு பக்தர்கள் செல்ல தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
- வேலங்கண்ணி ஆண்டு விழா தேர் பவானி யாத்ரீகர்கள் தடை: மாவட்ட நிர்வாக அறிவிப்பு
- மாவட்ட நிர்வாக அறிவிப்பு