லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவினால் 61,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஓட்டல்கள், மால்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன. இந்நிலையில் லூதியானாவில் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை மீறியதாக 54 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து லூதியானா கூடுதல் போலீஸ் கமிஷனர் சமீர் வர்மா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சாரபா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு உணவகத்தில் ஒரு சரக்கு பார்ட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.