கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டலில் சரக்கு பார்ட்டி: உரிமையாளர் உட்பட 54 பேர் கைது

லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவினால் 61,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஓட்டல்கள், மால்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன. இந்நிலையில் லூதியானாவில் கொரோனா பரவல் தடுப்பு  வழிகாட்டுதல்களை மீறியதாக 54 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து லூதியானா கூடுதல் போலீஸ் கமிஷனர் சமீர் வர்மா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சாரபா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு உணவகத்தில் ஒரு சரக்கு பார்ட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

போலீாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட ஓட்டலை சோதனை செய்தோம். அங்கு ஐந்து அட்டை பெட்டிகளில் விஸ்கி மற்றும் ஐந்து அட்டைப்பெட்டி பீர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை மீறி பார்ட்டி கொண்டாடிய நபர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர் என, 54 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: