மும்பை: ஐபிஎல் போட்டியின் 13வது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் 29 - மே 4 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால்,கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தொடர், வரும்19ம் தேதி முதல் நவ.10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகள் வழக்கமாக வார இறுதி நாளில் நடைபெறும். முதல்முறையாக இம்முறை இறுதிப்போட்டி செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது.