டாக்கா: வங்கதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் எரிவாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில், ஒரு குழந்தை உள்பட 12 பேர் பலியாகியுள்ளானர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் நாராயங்கஞ்ச் நதி துறைமுக பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குளிர்சாதனம் வெடித்துள்ளது. இதுகுறித்து பேசிய வங்கதேச போலீஸார் சனிக்கிழமை கூறும்போது, வங்கதேசத்தின் மத்தியப் பகுதி நகரமான நாராயன்கன்ஜியில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் மசூதியில் பரவிய தீ, அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பரவியது. இதில் 12 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.