தோனி எனக்கு முக்கியம்... - சிஎஸ்கே வீரர் ரெய்னா

ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியது எனது தனிப்பட்ட, கடினமான முடிவு. நெருங்கிய உறவினர்கள் கொள்ளையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுத்தது. இந்த நெருக்கடியான சமயத்தில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என விரும்பினேன். சூப்பர் கிங்சும் எனக்கு குடும்பம் போன்றதே. மாஹி பாய் மிக முக்கியமானவர். சரியான காரணம் இல்லாமல் யாராவது ரூ.12.5 கோடியை இழப்பார்களா? சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றிருக்கிறேன். சென்னை அணிக்காக இன்னும் நான்கைந்து ஆண்டுகள் விளையாடுவேன். அணி உரிமையாளர் சீனிவாசன் எனது தந்தை போன்றவர். தனது இளைய மகன் போலவே என்னை நடத்தி உள்ளார். நான் விலகியதற்கான உண்மையான காரணம் அவருக்கு தெரியாது. அது பற்றி பேசி விட்டோம். நான் இப்போது தனிமைப்படுத்தலில் இருந்தாலும் பயிற்சி செய்து வருகிறேன். விரைவில் துபாய் சென்று அணியுடன் இணையும் வாய்ப்பும் உள்ளது.

Related Stories: