ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அலிகார் சாலை பகுதியில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக சாலையில் வேகத்தடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட அலியார் சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் சாலையை கடந்து செல்லும்போது வேகத்தடை இல்லாத காரணத்தினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.பூவாணிக் கரை, பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சாலையை கடந்து செல்லும்போது விபத்துக்கள் நடக்கிறது. எனவே சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.