சென்னை: வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ரவுடியின் வீட்டில் இருந்து 4 வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 4 ரவுடிகளை கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை கேளம்பாக்கம் ஜோதி நகரில் ரவுடி அசோக்குமார் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 25ம் தேதி அசோக்குமாரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதற்காக தனது நண்பர்களுக்கு திருப்போரூர் அருகே சென்னேரி வனப்பகுதியில் 28ம் தேதி இரவு மது விருந்து அளித்தார். பின்னர், அசோக்குமாரை வீட்டில் விடுவதற்காக விக்கி (எ) வினோத்குமார் தனது பைக்கில் அழைத்து சென்றார். திருப்போரூர் அருகே சென்றபோது, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு, கீழே விழுந்து வெடித்து 2 பேரும் காயமடைந்ததும் தெரிய வந்தது.இதில் காயமடைந்த விக்கி (எ) வினோத்குமார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், அசோக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.