சென்னை: ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ருமேனியாவை சேர்ந்த சிபா லாஸ்லோ நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒவன் கோயலே ஜாம்ஷெட்பூர் எப்சி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதை அடுத்து, புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் அணி நிர்வாகம் தீவிரமாக இருந்தது. 7வது சீசன் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக ருமேனியாவை சேர்ந்த சிசபா லாஸ்லோ (56) நியமிக்கப்பட்டு உள்ளார்.