சென்னை:தென் மேற்கு பருவமழைக்கு காரணமாக இருக்கின்ற மைய அச்சு வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும். தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்வதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது. 2 நாட்களாக வானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் காற்றின் திசை மாற்றியுள்ளால் மழை பெரிதாக பெய்யவில்லை. இருப்பினும், கோவில்பட்டியில் 30மிமீ, தேவக்கோட்டை 20 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் டெல்லி வழியாக வடக்கு வங்கக் கடல் வரை செல்லும் தென்மேற்கு பருவ மழைக்கு காரணமாக விளங்கும் Monsoon Trough Lion என்னும் பருவாக்காற்றின் மைய அச்சு, வரும் நாட்களில் இமய மலை அடிவாரம் நோக்கி நகர்கிறது.