கோவை: கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று கூறினார். நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், நாட்டு இன நாய்களைப் பாதுகாக்கவும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.