திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோடு சேவா சமிதி திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம்அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 9 தாலுகா பகுதிகளில் சிறப்பு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு 2,800 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.