அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களில் சிலர் சாராயம் காய்ச்சுவது, அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கிகளை வைத்து வனவிலங்குளை வேட்டையாவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், அணைக்கட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று, அல்லேரி மலை கிராமம் சென்றனர். பின்னர், அங்கிருந்து நெல்லி மரத்து கொல்லை பகுதிக்கு போலீசார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வழியில் மரங்கள் வெட்டி போடப்பட்டு இருந்தது. இதனால் பைக்குகளை நிறுத்திவிட்டு போலீசார் அவற்றை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். அப்போது, சாராய வியாபாரி கணேசன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல் போலீசாரை வழிமறித்தது.