குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, போன்ற பகுதிகளில் பல கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கொய் மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா, கோவா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அது மட்டுமின்றி லண்டன், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஏற்றுமதி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.