பொன்னேரி: மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் விரோத நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்து பொன்னேரியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனா கொல்லுயிரி காலத்தில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்து விட்டு மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஏழை மருத்துவ மாணவர்களின் கனவை தகர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.