சென்னை: சென்னை காவல் துணை ஆணையர்களிடம் பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் ஜூலை 3-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு வழியாக எளிதில் தொடர்புகொண்டு (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை) புகார்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளை அடுத்து தமிழக முதல்வர் உத்தரவின்படி இந்த வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு வழியாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 27ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் வெளியூர் சென்று வந்துள்ள அனைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மீண்டும் இவ்வசதியின் விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் தங்களது குறைகளை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட துணை ஆணையாளர்களிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்களின் விவரங்கள்1. புனித தோமையார் மலை - 70101 108332. அடையார் - 87544 011113. தி.நகர் - 90030 841004. மைலாப்பூர் 63811 001005. திவல்லிக்கேணி - 94981 813876. கீழ்ப்பாக்கம் - 94980 106057. பூக்கடை - 94980 085778. வண்ணாரப்பேட்டை - 94981 331109. மாதவரம் - 94981 8138510. புளியந்தோப்பு - 63694 2324511. அண்ணாநகர் - 91764 2610012. அம்பத்தூர் - 91764 27100மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சுருக்கமாக வாட்ஸ் அப் தகவல் வழியாக ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 63691 00100 என்ற எண்ணில் அனுப்பலாம். அக்குறைகளை ஆராய்ந்த பின்னர் தேவைப்படும் புகார்தாரர்களை காவல் ஆணையர் வீடியோ கால் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்வார். பிற சாதாரண குறைகள், சம்பந்தப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையர்களுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.