கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் கூட்டு சாலையில் காய்கறி, டீக்கடை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பஞ்செட்டி, நத்தம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (43), ராஜேந்திரன் (35) ஆகிய இருவரும் மளிகை மற்றும் சலூன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைகளை பூட்டிவிட்டு வியாபாரிகள் வீடு திரும்பினர். பின்னர் நேற்று காலை ஜனார்த்தனன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் கடையை திறக்க வந்தனர். அவர்களது கடைகளின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.