திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வர கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பூக்கோலமிட தமிழகம், கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டியில், ‘ஓணத்தை முன்னிட்டு பொதுமக்கள் அந்தந்த இடங்களில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பூக்கோலத்திற்கு பயன்படுத்த வேண்டும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களை பயன்படுத்த வேண்டாம், அதன் மூலம், கொரோனா பரவ வாய்ப்பு உண்டு,’ என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள பூ வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பூக்களுக்கு முதல்வர் பினராய் நேற்று அனுமதி அளித்தார்.