இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையே சவுத்தாம்ப்டனில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தததை அடுத்து, இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில் (கிராவ்லி 267, பட்லர் 152), பாகிஸ்தான் 273 ரன்னுக்கு சுருண்டது (கேப்டன் அசார் அலி 141, ரிஸ்வான் 53). பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கிராவ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். பட்லர் மற்றும் ரிஸ்வான் தொடர் நாயகன் விருதை பகிர்ந்துகொண்டனர்.