தஞ்சை: தஞ்சையில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இதய நோயாளியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அலைகளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையை சேர்ந்த இன்பராஜ், இருதய நோய் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா தொற்று இருப்பதாக கூறி, சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர்.