பெங்களூரு: மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது. இது குறித்து, கர்நாடக மாநில அரசின் குடும்பம் மற்றும் சுகாதார துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தார் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்திற்கு வெளி மாநிலத்தில் இருந்து வருகிற நபர்கள் சேவா சிந்து என்ற செயலியில் பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும், விமானம் மற்றும் ரோடு வழியாக வந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும், கையில் முத்திரை குத்தப்படுவது, 14 நாள் தனிமையில் இருப்பது உள்ளிட்ட 7 விதிமுறைகள் கட்டாயம் ஆகும். இந்நிலையில் மத்திய அரசின் புதிய வழிக்காட்டுதலின்படி தற்போது நடைமுறையில் இருக்கிற அனைத்து விதிகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.