நெல்லை: ரவுடி துரைமுத்துக்கு ஆதரவாக முகநூலில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெல்லை ஆயுதப்படை காவலரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். பாளை. ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் சுடலைமுத்து. இவர், தனது முகநூல் பக்கத்தில் வல்லநாடு அருகே போலீஸ்காரர் சுப்பிரமணியனை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்துக்கு ஆதரவாக அவரின் இறுதி ஊர்வலத்தை பதிவு செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். குற்றவாளியை பிடிக்க சென்ற காவலரை கொன்ற குற்றவாளிக்கு, தனது சமூகத்தின் மீதுள்ள பற்றால் அவருக்கு ஆதரவாக சக காவலரே கண்ணீர் அஞ்சலி பதிவு செய்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.