சென்னை: சென்னை வாழ் வானூர் எஸ்.சி, எஸ்.டி உறவின் முறைகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இங்கிருந்த காய்கறி கடைகள் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. பழ மார்க்கெட் மாதவரம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 800 பழக்கடைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மாதவரம் சந்தையில் 200 பழக்கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.