லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளின் முன்னணி கால்பந்து அணிகள் மோதும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி சுற்று ஆக.16ம் தேதி முடிவுக்கு வந்தது. ஜெர்மனியை சேர்ந்த பேயர்ன் மியூனிக், ஆர்பி லெய்ப்ஜிக், பிரான்சை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், ஒலிம்பிக்யூ லியோன் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்சிலோனா, ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் பரிதாபமாக வெளியேறின. இதனால் நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.