புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜெய் கவுலி கூறியதாவது: ஆசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்து. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தேக்கநிலை ஏற்பட்டது. ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் திங்கட்கிழமை இரவு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.