மன்னார்குடி: திருப்பூர் மாவட்டம் மூலனூர் நத்தம்பாளையம் பகுதியில் இருந்து லாரி ஒன்று கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு வந்தது. அதேபோல் கரூரில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்தது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மன்னார்குடி அருகே காளவாய்க்கரை என்ற இடத்தில் ஜல்லி ஏற்றி வந்த லாரியின் டயர்களில் காற்று சரியாக இருக்கிறதா என பார்க்க டிரைவர் நாகராஜ் லாரியை சாலையோரம் நிறுத்தினார். அப்போது கறிக்கோழி ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜல்லி லாரியின் பின்பக்கம் மோதியது. கறிக்கோழி லாரியில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.