திருவனந்தபுரம்: கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் வெள்ளறிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பென்னி (48). அவருக்கு நாலரை ஏக்கர் நிலம்,பன்றி பண்ணைவைத்துள்ளார். இவரது மனைவி பெஸ்ஸி (46). தம்பதியின் மகன் ஆல்பின் (22). கம்பத்தில் வேலை செய்தார். ஊரடங்கால் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். மகள் ஆன்மேரி (16). 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி ஆன்மேரி, பென்னிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 5ம் தேதி ஆன்மேரி இறந்தார். பிரேத பரிசோதனையில், அவரது ரத்தத்தில் எலி விஷம் கலந்திருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் வீட்டில் ஐஸ்கிரீம் சாப்பிட்டது தெரிந்தது. மீதமிருந்த ஐஸ்கிரீமை பரிசோதித்ததில், அதில் எலி விஷம் கலந்திருந்தது.