தெலுங்கானாவில் வேண்டுமென்றே அடுத்தடுத்து 3 பேரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்..!! வரதட்சணை கேப்பதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி!!!

தெலுங்கானா:  தெலுங்கானாவில் வேண்டுமென்றே அடுத்தடுத்து 3 பேரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண், வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக கூறி 3 பேரிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்து கொண்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், மலகொண்டூர் பகுதியை சேர்ந்த ரவளி என்பவர்தான் இவ்வாறு நூதன மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் கடந்த 2015ம் ஆண்டு அன்னாராம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 3 மாதத்திலேயே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கணவர் மீது காவல் நிலையத்தில் ரவளி புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் மூலம் சுமார் 3 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, சுரேஷை அந்த பெண் விவாகரத்து செய்துள்ளார். அடுத்ததாக மள்ளாரான் மண்டலம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து, 5 மாதங்களுக்கு பிறகு அதே பாணிலியில் 3 லட்சம் ரூபாயை போலீசார் மூலம் ரவளி பெற்றுள்ளார். அத்துடன் விடாமல், 3வதாக மணக்கொடுரை சேர்ந்த சுரேஷ் என்பவரை ஏமாற்றி திருமணம் செய்த ரவளி அவரையும் வரதட்சணை புகாருக்குள்ளாக்கினார்.

இதனையடுத்து தனக்கு நியாயம் கோரி தண்ணீர் டேங்கின் மீது ஏறி ரவளி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ரவளியிடம் போலீசார் சமாதானம் பேசி கீழே இறக்கிறனர். இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் இதுபோன்று 3 பேரிடம் ரவளி பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் காவலர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Related Stories: