கூடலூர்: நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.