வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ள நாடுகள் கூட தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்து நாடு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது. ஏற்கனவே கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்தியதால் நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30ம் தேதி வந்துள்ளார். அவர் தங்கியிருந்த 3வது நாளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவந்தது.