செய்துங்கநல்லூர்: கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றோரத்தில் இடிந்துகிடக்கும் தடுப்புச் சுவரால் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செய்துங்கநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கொங்கராயகுறிச்சி கிராமம் உள்ளது. பருவமழையின் போது வெள்ளம் வந்தால் கொங்கராயகுறிச்சி புதுமனை இந்திரா நகர் வழியாக அவ்வப்போது வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர், இதனை தடுக்க பஞ்சாயத்து சார்பாக ஆற்றோரத்தில் தடுப்பு சுவர் ஒன்று கட்டப்பட்டது, அதுபோல பொதுப்பணித்துறை சார்பாகவும் ஒரு தடுப்பு சுவர் கட்டப்பட்டு இருக்கிறது,