புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை, ரூ.225 விற்க பில்கேட்ஸ் முடிவு செய்துள்ளார். கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் பல நாடுகள் மும்முரமாக உள்ளன. இதில், முதலில் முந்திக் கொள்வதற்காக ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. இது கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை அடுத்த வாரத்தில் பயன்பாட்டுக்கு விடப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், எந்தவொரு மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வளவு குறுகிய காலத்தில், மனிதர்களிடம் முழுமையாக பரிசோதனை நடத்தாமல் இந்த மருந்தை ரஷ்யா வெளியிடுவது ஆபத்தானது என மருந்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவிலும் இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஐதராபாத்தை சேர்ந்தி பயோடெக் நிறுவனமும் இணைந்து., ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. இவையும் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிப்பது நடந்து கொண்டிருக்கிறது. மொத்தமாக 3 கட்டங்களாக இவை மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட வேண்டும். அதில், கோவாக்சின் 2வது கட்டத்தை எட்டியிருக்கிறது.