திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இவரது அரை நிர்வாண உடலில் தனது 12 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து, அதை ேபஸ்புக்கில் வீடியோவாக ெவளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ெதாடர்பாக பாஜவை சேர்ந்த அருண் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ரெஹானா பாத்திமா மீது போக்சோ மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.