தேவாரம்: ஆன்லைன் வகுப்புக்கு தந்தை ஆன்ட்ராய்ட் போன் வாங்கித் தராததால், மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தேவாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரத்தில் உள்ள சாலைத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். கூலிதொழிலாளி. இவரது மகள் வின்சியா (18). கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கால் செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.