சத்தியமங்கலம்: தமிழக- கர்நாடக எல்லையில் யானைகள் லாரியை வழிமறித்ததால் மரத்தில் ஏறி டிரைவர், கிளீனர் உயிர் தப்பிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே முகாமிட்டு அங்கு சாலையில் சிதறிய கரும்பு துண்டுகளை தின்பதற்காக உலா வருகின்றன. நேற்று முன்தினம் மாலை கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக தமிழக- கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது.