மதுரை:மதுரை மாநகராட்சி நீச்சல்குளம் எதிரில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மிகப் பழமையான வேப்ப மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி நீச்சல்குளம் எதிரில், டாக்டர் தங்கராஜ் சாலையில், கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நுழைவு வாயிலில் உள்ள மிகப் பழமையான வேப்ப மரம், எப்போதும் விழுந்து விடுமோ என்ற அபாயகரமான நிலையில் உள்ளது.இவ்வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வருவர். மேலும், இவ்வழியாக இரு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், மரம் விழுந்து பெரும் ஆபத்தை உருவாக்கி விடுமோ என உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியது உள்ளது.