புதுடெல்லி: பிரபல கால்பந்து போட்டியான ஐ-லீக் தொடரில் இந்த முறை டெல்லியிலிருந்து புதிய கிளப் விரைவில் அறிமுகமாகிறது. இந்தியாவின் தேசிய கால்பந்து லீக் தொடர், 2007ம் ஆண்டு முதல் ஐ-லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. மொத்தம் 11 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்று வருகின்றன. நடப்பு சாம்பியனான மோகன் பகான் இந்தியாவின் பழமையான கால்பந்து கிளப் ஆகும். இப்போது இந்த கிளப், ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் ஏடிகே-யுடன் இணைந்து விட்டது. அதனால் இனி ஐஎஸ்எல் தொடரில் மட்டுமே மோகன் பகான்-ஏடிகே விளையாடும்.