கொடைக்கானல்: கொடைக்கானலில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியும் குறைந்தபட்சம் 5 முதல் 7 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை வசதிகள் போதிய அளவில் இல்லை. வயதானவர்கள் பயன்படுத்தக்கூடிய வெஸ்டர்ன் கழிப்பறை பழுதாகி உள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் நோயாளிகளின் படுக்கைகளும் சேதமாகி கிடக்கின்றன.
கொடைக்கானல் குளிர்பிரதேசம் என்பதால் இரவில் தூங்க கம்பளி போர்வைகள் மிக அவசியமாகும்.