டுரின்: சீரி ஏ தொடரில் சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட ஜுவென்டஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது. கொரோனா தொற்று பீதிக்கு இடையில் மீண்டும் தொடங்கிய இத்தாலி சீரி ஏ கால்பந்து போட்டி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்த ஜுவென்டஸ் அணி ஜூலை 27ம் தேதியே சாம்பியன் ஆகிவிட்டது. அதனால் எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் அசத்தலாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூலை 29ம் தேதி நடந்த போட்டியில் காக்லியாரி அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோற்றது.