அமித்ஷாவுடன் சந்திப்பு தனிமைப்படுத்தி கொண்ட ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை கடந்த ஒரு வாரத்தில் நேரில் சந்தித்தவர்கள் உரிய மருத்துவ ஆலோசனை பெறுமாறு அவர் டிவிட்டரில் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்த மத்திய அமைச்சர் பாபுலால் சுப்ரியோ நேற்று முன்தினம் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மற்றொரு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனை நேற்று அவர் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.

Related Stories: