நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராமசுப்ரமணியன் ஆகியோர் குறுவை நெல்பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்துள்ளனர். நெல்லில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை இயற்கை எருக்கலான பசுந்தாள் உரம், தொழு உரம், மண் புழு உரம் மற்றும் மக்கிய தென்னை நார்கழிவு, செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் முயூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களையும் உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லத்தையும், நுண்ணூட்ட சத்துக்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பது தான் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஆகும். கோடையில் சணப்பை, தக்கைப்பூண்டு பயிரிட்டு பின் மடங்கி உழுவதால் மண்ணில் கரிமப் பொருள்களின் அளவு அதிகரிப்பதுடன் பயிருக்கு வேண்டிய தழைச்சத்து கிடைக்கின்றது.